• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் துறையின் செயலாற்றுகை சார்பில் 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள்
- தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு என்பவற்றுடன் இணைந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கூடாக, 457.85 பில்லியன் ரூபா வருமானத்தினை 2017 ஆம் ஆண்டில் உருவாக்கக்கூடியதாக இருந்ததுடன் கூடுதல் வருமானத்தை உருவாக்கும் பொருட்டு பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், சேவைகள் மற்றும் வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோக்கம் கருதி, கலப்பு தெங்கு விதைகளின் உற்பத்தி, ஒட்டுண்ணி சேதாரங்களை கட்டுப்படுத்துவதற்கான வேட்டையாடும் ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் அத்துடன் ஆக்கத்திறன் வாய்ந்ததும் உயர் வினைத்திறன் கொண்டதுமான நவீன புகைப்பதன மனைகளை நிருமாணித்தல் சார்பிலான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்நோக்கத்திற்குத் தேவைப்படும் ஏற்பாட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.