2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அரசாங்க - தனியார் பங்களிப்புக்கு ஒத்துழைப்பு நல்குவதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த - அரசாங்க - தனியார் பங்களிப்புக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கான கட்டமைப்பொன்றை விருத்தி செய்வதற்கும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியிடுவதற்குமாக உலக வங்கியின் மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியிடமிருந்து 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, அது குறித்து இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |