2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கல்கிஸ்சையிலிருந்து அங்குலான வரையிலான கரையோரப் பிரதேசத்தை நிலைப்படுத்துதலும் களுகங்கை முகத்துவாரத்தில் அரிப்புக்குள்ளான இயற்கை மணல் பரப்பை நிலைப்படுத்தலும் - தென் கொழும்பு மணல் போஷிப்புக் கருத்திட்டத்தின் கீழ் கல்கிஸ்சையிலிருந்து அங்குலான வரையிலான கரையோரப் பிரதேசத்தை இயந்திரமயமான மணல் போஷிப்பு முறைமையைப் (Sand Engine Methodology) பயன்படுத்தி நிலைப்படுத்தும் பொருட்டும் அண்மைக்கால வௌ்ளப்பெருக்கு காரணமாக களுகங்கை முகத்துவாரத்தில் அரிப்புக்குள்ளான மணல் பரப்பை மீள் நிலைப்படுத்தும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|