2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கலாபவனத்தை புனரமைத்தல் - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேசிய கலாபவனத்திற்கு துரிதமாக செய்யப்படவேண்டுமென இனங்காணப்பட்டுள்ள புனரமைப்பு வேலைகள் சார்பில் தேவைப்படும் 42 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |