2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடமத்திய மாகாணத்தில் வறட்சியான காலநிலை காணப்படும் பிரதேசங்களில் வற்றிப்போயுள்ள குளங்கள் மற்றும் விவசாய கிணறுகளை பழைய நிலைக்கு கொண்டு வருதல் - வடமத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலைமை காரணமாக சுமார் 12,000 விவசாய கிணறுகளும் குடிநீர் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் சுமார் 2,000 நீர்நிலைகளும் வற்றிப்போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக வறட்சிக்கு ஏற்றவாறு பொது குடிநீர் கிணறுகளை புதிதாக நிருமாணித்தல், வற்றிப்போயுள்ள விவசாய கிணறுகளை அகழ்தல், வற்றிப்போயுள்ள நீர்நிலைகளில் கிணறுகளை அகழ்தல், குடிநீர் கிணறுகளை புனரமைத்தல் போன்றவற்றை பிரதேச செயலாளர்களின் ஊடாக விவசாய அமைப்புகளின் மூலம் செய்து கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |