• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பரிமாற்ற, விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மின் வலைப்பின்னல் உப நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- தேசிய மின்சார பரிமாற்ற, விநியோக வலையமைப்பின் வினைத்திறனை விருத்தி செய்து மேம்படுத்தும் பொருட்டு 04 பொதிகளை உள்ளடக்கிய கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இதன் இரண்டாவது பொதியின் கீழ், கிரிந்திவெல, பத்தரமுல்லை, பியகம, கொத்மலை, வேயாங்கொடை, பாதுக்க, கொஸ்கம, சீதாவக்க, துல்ஹிரிய, இரத்மலான, பன்னிபிட்டிய, கொலன்னாவ, அத்துருகிரிய, பொல்பிட்டிய, உக்குவெல, மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் மின் வலைப்பின்னல் உப நிலையங்களை நிருமாணித்து மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை Mitshubishi Corporation மற்றும் Ceylex Engneering (Pvt) Ltd கூட்டுத் தொழில் முயற்சிக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.