• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொரளை ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலை யொன்றாக அபிவிருத்தி செய்தல்
- பொரளை ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் கீ்ழ், புதிய காவறை கட்டடத் தொகுதி யொன்றின் நிருமாணம் இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் கட்டமாக கூறப்பட்ட கட்டடத்தில் சுகாதார சேவைகளை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு அவசியமான மின்சாரத்தை வழங்குவதற்கும், நீர் மற்றும் சாக்கடை முறைமையினை நிருமாணிப்பதற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.