2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊழியர் சேமலாப நிதியத்திற்காக பயன்படுத்தப்படுவதற்கென கணக்கீடு மற்றும் திறைசேரி முகாமைத்துவ முறைமையொன்றை கொள்வனவு செய்தல் - கிட்டதட்ட 2,000 பில்லியன் ரூபா தொகை கொண்ட ஊழியர் சேமலாப நிதிய சேகரிப்பு, கணக்குகளாக பேணுதல், நலன்களைச் செலுத்துதல், மிகை நிதியங்களை முதலீடு செய்தல் மற்றும் பதிவேடுகளைப் பேணுதல், இந்த நிதியங்களின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் என்பன இலங்கை மத்திய வங்கியினால் ஆற்றப்படுகின்றன. இந்த நிதியத்தின் கணக்கீடு மற்றும் திறைசேரி முகாமைத்துவ செயற்பாடுகள் கருதி புதிய முறைமையொன்றை இணைத்துக் கொண்டு நடைமுறையிலுள்ள கணனிமுறைமையை பதிலீடு செய்தல் பொருத்தமுடையதாகவிருக்குமென கண்டறியப்பட்டுள்ளபடியால், இந்த நோக்கத்திற்கான கொள்வனவு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |