2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடற்படை மருத்துவமனை கட்டடத் தொகுதியின் ஊழியர்களுக்கு தங்குமிட வசதி கருதி கட்டட வசதிகளை வழங்குதல் - 684 கடற்படை ஆளணியினரை உள்ளடக்கிய கடற்படை பொது மருத்துவமனையானது இலங்கை கடற்படையின் கடற்படை ஆளணியினர், ஓய்வுபெற்ற கடற்படை ஆளணியினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கி நாளொன்றுக்கு கிட்டதட்ட 450 ஆட்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குகின்றது. அதற்கிணங்க, அவர்களுக்கான நிரந்தர தங்குமிடம் இல்லாமை காரணமாக கடற்படை ஆளணியினர் முகங்கொடுக்கும் சிரமங்களை கவனத்திற்கொண்டு அத்தங்குமிடத்தை வழங்கி உதவுவதற்கென நிரந்தரமான நான்கு (04) மாடி வதிவிட கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |