2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை மருத்துவமனைக்கு இரண்டு மாடி புதிய மருத்துவமனை கட்டடங்களை நிருமாணித்தல் - தெற்கு கடற்படை கட்டளைபீடத்தின் கடற்படை மருத்துவமனை பூசாவில் அமைந்துள்ளதுடன், இந்த மருத்துவமனையானது இக்கட்டளைப் பீடத்துடன் இணைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 4,200 கடற்படை ஆளணியினருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குமான மருத்துவ வசதிகளை வழங்குகின்றது. அதற்கிணங்க, இந்த மருத்துவமனையானது தற்போது பேணப்பட்டுவரும் குறைந்த வசதிகளைக் கொண்ட பழைய கட்டடங்களுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடங்கள் இரண்டினை நிருமாணிப்பதற்கு மேலும் தேவைப்படும் நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |