• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பில் மும்மொழிக் கல்வியினைப் பெறக்கூடிய புதிய தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
- சகல இனங்களையும் சேர்ந்த மாணவிகளுக்கு மும்மொழிக் கல்வியினை வழங்குவதற்கென கொழும்பில் புதிய மும்மொழித் தேசிய பாடசாலையொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வௌ்ளவத்தைப் பிரதேசத்தில் 900 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீடு ஒன்றுடன் மும்மொழி தேசிய பாடசாலையொன்றாக இதை தாபிக்கும் பொருட்டும் இப்பாடசாலைக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.