2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச்சட்டத்தை திருத்துதல் - கடன் இணக்க சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கடன் இணக்க சபையின் தலைவர், உறுப்பினர்கள், கிளை சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர்களின் தெரிவு செய்யும் தகவு திறன்களை திருத்துவதன் மூலம் 1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |