2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்குதல் - சிறிய தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உபகரணங்களை விநியோகிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டும் நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், உரிய முறையில் நிலங்களை பண்படுத்தல், மரங்களை வெட்டுதல், களைகளை அகற்றுதல், தேயிலைச் செடிகளின் பராமரிப்பு, உரிய முறையில் பசளையிடுதல், மண் அரிப்பினைத் தடுத்தல், வறட்சியான காலப்பகுதியில் தேயிலைச் செய்கைக்கு போதுமான நீர் வசதிகளை ஏற்பாடு செய்தல் போன்ற திறமுறைகளின் ஊடாக சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தொடர்ச்சியான தேயிலை உற்பத்தியை உறுதி செய்து உற்பத்தி திறனை மேம்படுத்துவது மிக பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேயிலைச் செய்கைகுரிய முறையான விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான உபகரணங்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை 250 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் 10,000 நீர் தாங்கிகளையும் 3,500 நீர் பம்பிகளையும் 4,500 தௌிகருவிகளையும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |