• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறப்பர் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
- இலங்கையில் இறப்பர் செய்கையின் உற்பத்தித் திறனானது இந்த தொழிலில் ஈடுபடும் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான மட்டத்தில் நிலவுகின்றதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீண்டகால தீர்வாக பயன்பெறும் ஆயுட் காலத்தை கடந்தும் குறைந்த அறுவடையினை கொண்டுள்ளதுமான பழைய மரங்களை அப்புறப்படுத்தி, கூடிய பயன்தரும் புதிய குலோனிங் முறைமை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட இறப்பர் கன்றுகளை மீண்டும் நடுவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும் இறப்பர் மீள் நடுகைக்காக ஏற்கவேண்டி நேரிடும் கூடிய செலவினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இறப்பர் புதிதாக நடும் பொருட்டு வழங்கப்படும் மானியத்தை ஹெக்டாயர் ஒன்றுக்கு 150,000/- ரூபாவிலிருந்து 300,000/- ரூபா வரையும் இறப்பர் மீள் நடுகைக்காக வழங்கப்படும் மானியத்தை ஹெக்டாயர் ஒன்றுக்கு 175,000/- ரூபாவிலிருந்து 350,000/- ரூபா வரையும் அதிகரிக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.