2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசிறை முறிகளை வழங்குதல் - இலங்கை அரசாங்கத்தினால் 2017 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த வரவுசெலவுத்திட்டத்திற்கு நிதியிடு வதற்காக சருவதேச அரசிறை முறிகள் வழங்கப்படுவதோடு, 2018 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த முறிகள் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் வழங்கப் பட்டுள்ளன. தற்போதைய பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றுமதி பல் வகைமைப்படுத்தல், வௌிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்தல், குறைந்த செலவுடனான நிதியிடல் முகாமைத்துவம் போன்றவற்றை எதிர்பார்த்து யென், ரென்மின்பீ (RMB) அல்லது யூரோ ஆகிய அந்நிய செலாவணிகளில் சருவதேச நிதி சந்தைகளை அணுகும் சாத்தியப்பாட்டை ஆராய்ந்து, சிபாரிசுகளை சமர்ப் பிப்பதற்காக உரிய நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |