• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார முறைமைகள் மேம்பாட்டு கருத்திட்டம்
- ஊவா, சப்பிரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவைகளை விருத்தி செய்தல், சுகாதார மற்றும் நோய் கட்டுப்பாட்டினை பலப்படுத்துதல் உட்பட இது தொடர்பில் கொள்கைகளை வகுத்தமைத்தல் ஆற்றல் அபிவிருத்தி என்பன பொருட்டு 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த முதலீட்டிலிருந்து 12.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் மேலும் 37.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய நிதிகளை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உடன்படிக் கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.