• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்காக வெப்பநிலை கட்டுப் பாட்டு களஞ்சியசாலையொன்றை தம்புள்ளையில் தாபித்தல்
- மரக்கறி மற்றும் பழ வகை செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கு அவர்களுடைய உற்பத்திகளை நீண்டகாலம் பழுதாகாமல் புதிய நிலையிலேயே களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய விதத்தில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக் கூடிய களஞ்சியசாலையொன்றை 475 மில்லி யன் ரூபா முதலீட்டில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகா மையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பருவகால ரீதியில் அறுவடை கிடைக்கப்பெறும் பயிர்கள் தொடர்ச்சியாக சந்தையில் கிடைப்பதனை உறுதி செய்ய முடியுமாகையினால், இத்தகைய பயிர்களுக்கான விலை ஏற்றத் தாழ்வை குறைத்துக் கொள்வதன் மூலம் இந்த பயிர்களுக்கு நிலையான விலை யொன்றைப் பேணவும் முடியும். உத்தேச முதலீட்டின் மூலம் 300 மில்லியன் ரூபாவைக் கொடையொன்றாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, வெப்பநிலை கட்டுப் பாட்டு களஞ்சியசாலை யொன்றை தம்புள்ளையில் தாபிப்பதற்குத் தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும் அதனை முகாமிப்பதற்கு வழிமுறை யொன்றை வகுத்தமைப் பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச் சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.