2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொத்மலை இணைந்த சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்திற்கு புதிய மாநாட்டு மண்டபமொன்றை நிருமாணித்தல் - முப்படைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேவைப்படும் பல்வேறுபட்ட மொழி தொடர்பில் பயிற்சியினை வழங்கும் கொத்மலை இணைந்த சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தில் தற்போது பயன்படுத்தப்படும் பழையதும் குறைந்த வசதிகளுடனும் கூடியதுமான மாநாட்டு மண்டபத்திற்கு பதிலாக பயிற்சி பெறுபவர்கள் 150 பேர்களுக்கு ஒரே தடவையில் இருக்கக் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய மாநாட்டு மண்டபமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |