2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஈர நிலங்களை நிரப்புதல் மற்றும் அழிக்கப்படுதலை உடனடியாக நிறுத்துவதற்கு கட்டளைகளைப் பிறப்பித்தல் - கொழும்பு தலைநகர் வலயத்தில் ஈர நிலங்களை நிரப்புதல் மற்றும் அழிக்கப்படுதலை உடனடியாக நிறுத்துவதற்கு தற்காலிக தடையுத்தரவு கட்டளையொன்றை பிறப்பிப்பதற்கும் ஈர நிலங்களை பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப் படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டிலான சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவை யினால் ஏற்கனவே உத்தியோத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் குழுவினால் செய்யப்பட்ட பின்வரும் சிபாரிசுகளின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. i. தேசிய ரீதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களில் செய்யப்படவேண்டிய அத்தியாவசிய நிருமாணிப்பொன்று அல்லது இலகு புகையிரத வீதி முறைமையின் கீழ் இனங்காணப்பட்டுள்ள நிருமாணிப்பு தவிர வேறு எந்தவித நோக்கத்திற்காகவும் கொழும்பு தலைநகர் வலயத்தினுள் அமைந்துள்ள ஈர நிலங்கள் சார்ந்த சகல விதத்திலுமான நிரப்பல் மற்றும் நிருமாணிப்புகளை நிறுத்துவதற்கு தடையுத்தரவு கட்டளையொன்றை பிறப்பித்தல். ii. ஏற்கனவே அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிம்புலாஎல மற்றும் தியவன்னாஓயா பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ள நிலப்பிரதேசம் தவிர ஏனைய ஈர நிலப்பிரதேசங்களை ஒதுக்கப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்துமாறு வன சீவராசிகள் பணிப்பாளர் அதிபதிக்கு பணிப்பு விடுப்பதற்கும். |