2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களித்தல் தொடர்பாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - இராஜதந்திர மற்றும் விசேட சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |