• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் 1337 புகையிரத கடவைகள் உள்ளதுடன் அவற்றில் 520 கடவைகளில் மாத்திரமே பாதுகாப்பு முறைமை தொழிற்படுகின்றது. மேலும், மற்றுமொரு 400 கடவைகளில் பாதுகாப்பு முறைமைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள 417 கடவைகளில் பாதுகாப்பு முறைமையை வழங்கி, பொருத்தி, நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியினை வழங்குவற்கு ஹங்கேரிய அரசாங்கம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இக்கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்காக ஹங்கேரிய அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட M/S. Muszer Automatika Ltd. நிறுவனத்திடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.