• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் வௌியேறும் பகுதியில் பணப் பரிமாற்ற கரும பீடங்களை நடாத்திச் செல்வதற்கு கேள்வி கோரல்
- பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் வௌியேறும் பகுதியிலுள்ள பணப் பரிமாற்ற கரும பீடங்களை 06 ஆக அதிகரிப்பதற்கும் அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தை பயன்படுத்தும் சுற்றுலா பிரயாணிகளின் நிதி மற்றும் அந்நிய செலாவணி செயற்பாடுகளின் வசதிகருதி 2019 ஆம் ஆண்டிலிருந்து அத்தகைய சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கேள்விகளை கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.