2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய தொழில்சார் பாதுகாப்பு வாரம் - 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதிவரை வருகின்ற தேசிய தொழில்சார் பாதுகாப்பு வாரத்தின் போது பல்வேறு செயற்பாடுகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களினால் நாடாளாவிய ரீதியில் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார செயலமர்வை ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பிலும் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிசிறப்பு விருது வைபவத்தை இந்த வாரத்திற்குள் தேசிய மட்டத்திலும் நடாத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |