2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டதன் காரணமாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளான மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த ஆட்களுக்கு நட்டஈடு செலுத்துதல் - பல்வேறுபட்ட அரசியல் ரீதியிலான காரணங்களுக்காக தமது உயிரை இழந்த, காயமுற்ற மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த ஆட்களுக்கு நட்டஈட்டை செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட குழுவொன்றினால் செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கு இணங்க நட்டஈட்டை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் 2019 ஆம் ஆண்டிலேயே அந்த நட்டஈட்டை செலுத்தி தீர்த்துக் கொள்ளும் பொருட்டும் பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினாலும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |