• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்குதல்
- கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் 648,151 பேர்கள் சார்பில் காலணிகளை கொள்வனவு செய்வதற்கான அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தமது விருப்பத்தின் பேரில் பொருத்தமான ஒருசோடி காலணிகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இந்த மாணவர்களுக்கு உரியதாக இருந்தததோடு, இதன் மூலம் இந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கணிசமான அளவு பொருளாதார நலன் உரியதாகின்றதென கண்டறியப்பட்டது. ஆதலால், 2018 ஆம் ஆண்டு சார்பிலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.