• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆள் ஒருவரின் மரணத்திற்கான நட்டஈட்டினை அறவீடு செய்து கொள்ளும் சட்டமூலம்
- வேறு ஒருவரின் குற்ற நடவடிக்கையொன்றினால் அல்லது செய்யப்பட வேண்டிய நடவடிக்கையொன்றை செய்யாமல் இருத்தல் அல்லது வேண்டுமென்றே செய்யாதிருத்தல் அல்லது தவிர்த்தல் என்பன காரணமாக ஆள் ஒருவரின் மரணம் சம்பவிப்பது சம்பந்தமாக நட்டஈட்டினை அறவீடு செய்வதற்கும் இது சம்பந்தமான பிற கருமங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டும் சட்டமா அதிபரின் உடன்பாட்டுடன் வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.