2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடமாகாண நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டம் - கடற்றொழில் துறைமுகம், நங்கூரமிடல் பிரதேசம் மற்றும் இறங்குதுறை போன்றவற்றை நிருமாணித்தல் அபிவிருத்தி செய்தல், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய 03 நோக்கங்கள் கொண்ட வடமாகாணத்தில் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டமானது 2018 - 2024 காலப்பகுதிக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தின் அரசாங்கத்தின் பங்களிப்பாக 27.22 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான தொகையினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |