2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய இடவசதியினை பெற்றுக் கொள்ளல் - சுமார் 170 பதவியணியினருக்கும் இந்த அலுவலகத்தின் 12 துணை அலுவலகங்களுக்கும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகைதரும் கலைஞர்களுக்கும் ஏனையோருக்கும் வசதிகளை வழங்கும் பொருட்டு பத்தரமுல்ல, செத்சிறிபாய கட்டடத்தில் நடாத்திச் செல்லப்படும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு போதுமான இடவசதி இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், இதற்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களம் நடாத்திச் செல்லப்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள கட்டட மனையிடத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தை தாபிப்பதற்காக இந்த கட்டட மனையிடத்தை கலாசார அலுவலகள் திணைக்களத்திற்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |