2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொட்டாவை பொலிஸ் நிலையத்திற்காக காணியினை கையளித்தல் - அரசாங்கத்தினால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள 49.80 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியில் கொட்டாவை பொலிஸ் நிலையத்தை நடாத்திச் செல்வதற்காக இந்தக் காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |