• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனைவிடத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம் - நிருமாணிக்கப்படும் காலப்பகுதிக்குள் பேரூந்து போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
- கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனைவிடத்தை நிருமாணிக்கும் பணிகள் திட்டமிடல் கட்டத்தில் நிலவுகின்றதோடு, அதன் நிருமாணிப்பு காலத்தினுள் தடையின்றி பேரூந்து போக்குவரத்துக்கான வசதிகளை வழங்கவேண்டியுள்ளது. நகரத்தினுள் வாகன நெரிசலைக் குறைக்கும் விதத்தில் இந்த பேருந்து செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதோடு, மத்தியமாகாண பிரயாணிகள் போக்குவரத்து சேவை அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "சஹசர" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகவல் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பேரூந்து போக்குவரத்து நடவடிக்கைகள் கையாள்கை முறைமையை விருத்தி செய்து இது நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உத்தேச தகவல் தொழினுட்ப நடவடிக்கைமுறையை மேற்குறிப்பிட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.