2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குச் சொந்தமான பாதுகாப்பு கட்டடங்களை விருத்திசெய்தல் - பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் முன் பக்க நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள ஜயந்திபுர பாதுகாப்பு கட்டடத்தையும் அதன் பின்புற நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பின்னியர பாதுகாப்பு கட்டடத்தையும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் பாதுகாப்பு மற்றும் கையாள்கை பணிகளுக்குத் தேவையான புதிய தொழினுட்ப வசதிகளுடன் விருத்தி செய்து புனரமைக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |