• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை பூங்கா மற்றும் பசுமை வலயத்துடனான நடைபாதை என்பவற்றை நிருமாணித்தல்
- வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் பிரதேச சபை பிரிவுகள் யாவும் தழுவப்படும் விதத்தில் 'பசுமை பூங்காவுடன்' அல்லது 'பசுமை வலயத்துடன்' நடைபாதை தாபிப்பதற்கு 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் முக்கியமாக நாடுபூராவும் 54 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பசுமை பூங்கா நிகழ்ச்சித்திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வை மற்றும் உரிய உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒழுங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.