• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் துறைமேடையை விரிவாக்குதல்
- கிழக்கு மற்றும் தென் கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொழினுட்ப அபிவிருத்திக்கு ஒருங்கிணைவாக திருகோணமலை துறைமுகத்தின் கொள்கலன் கையாள்கைக்காக அதிகரித்து வரும் கேள்வியினை நிறைவு செய்யும் பொருட்டு திருகோணமலை துறைமுகத்தில் மேலதிக நங்கூகரமிடும் வசதிகளை மேம்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள ஒரே பல்பணி நங்கூரமிடும் இடமான அஷ்ரப் துறைமேடையை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.