2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவை - தேசிய இளைஞர் சேவைகள் சபையினால் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங் களுக்கிடையே தொண்டர் சேவை பணிகள் முன்னுரிமை பெற்ற போதிலும் இளைய சமூகத்தினரின் தொண்டர் சேவை சார்பில் உரிய மெச்சப்படாததன் காரணத்தினால் தொண்டர் நிகழ்ச்சித்திட்டங்கள் சார்பில் இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதில் மேலும் கடினமாயுள்ளது. இதற்கமைவாக, கிராமிய, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் இளைஞர் கழக திட்டத்தைப் பலப்படுத்துவதற்கும் தொண்டர் ஊழியர்களுக்கான ஐக்கிய நாடுகளின் தொண்டர் நிகழ்ச்சித்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மை, கொரிய சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மை, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சருவதேச அமைப்புகளின் ஊடாக தொண்டர்களை பயிற்றுவிப்பதற்கும் பிரேரிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று சிறந்த தொண்டர்களுக்கு தங்கம், வௌ்ளி மற்றும் வெண்கல பரிசுகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் பல்கலைக்கழகம் உட்பட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படும் போது தொண்டர்களை ஊக்குவிக்கும் வழிமுறையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஏதேனும் மதிப்பீடொன்றை வழங்குதல் அடங்கலாக கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கு வழிநடத்தல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |