• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பாடசாலைகளில் 13 வருடகால உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- இலவச கல்வி கொள்கை காரணமாக ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மட்ட கல்வி தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க விருத்தியினை கண்டுள்ள போதிலும் கல்வி பொது தராதர (சாதாரணதர) பரீட்சையின் பின்னர் இதுவரை வருடாந்தம் சுமார் 80,000 மாணவர்கள் உயர்கல்வியோ அல்லது தொழில் தேர்ச்சியோ இன்றி பாடசாலை முறைமையிலிருந்து விலகுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவ சமுதாயத்தினரை உள்நாடு மற்றும் வௌிநாட்டு தொழிற்சந்தையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய தொழில் தேர்ச்சிமிக்கவர்களாக மாற்றும் நோக்கில் 13 வருடகால தொடர்ச்சியான கல்வியினை வழங்கும் பொருட்டு கல்வி பொது தராதர (சாதாரணதர) பரீட்சை பெறுபேற்றினை கருத்திற் கொள்ளாது மேலும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் 26 தொழில்சார் பாடங்களிலிருந்து ஒரு பாடத்தில் தேர்ச்சியினை வழங்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2019 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் சுமார் 860 மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.