• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“விரு சுமித்துரு" வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் பகுதியளவிலான வீடுகளின் நிருமாணிப்பினை துரிதப்படுத்துதல்
- இராணுவ செயற்பாட்டின் போது மரணித்த இராணுவ வீரர்களின் கிட்டிய உறவினர்களினதும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களினதும் வீட்டுத் தேவைகளை ஈடு செய்யும் பொருட்டு 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் 1,950 முழுமையான வீடுகளையும் 1,700 பகுதியளவிலான வீடுகளையும் நிருமாணிக்கும் பொருட்டு “விரு சுமித்துரு" வீடமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன்போது வீடுகளை நிருமாணிப்பதற்கான ஊழியப் பங்களிப்புடனான முழுமையான வீடொன்றுக்கு 4 இலட்சம் ரூபாவும் பகுதியளவிலான வீடொன்றுக்கு 2 இலட்சம் ரூபாவும் என மதிப்பிடப்பட்டு அதனை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணி ஆகியவற்றின் ஊழியப் பங்களிப்பில் மேற்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முழுமையான வீடுகளை நிருமாணிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஊழியப் பங்களிப்பினை பெற்றுக் கொள்ள முடிந்த போதிலும் பகுதியளவிலான வீடுகளை பூர்த்தி செய்யும் போது குறித்த பங்களிப்பானது எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடியாமற் போயுள்ளது. ஆதலால், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பகுதியளவிலான வீடுகளை பூர்த்தி செய்வதனை துரிதப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஊழியப் பங்களிப்புக்கு பதிலாக அரசாங்கத்தின் நிதி பங்களிப்பினை பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் அத்தகைய 1,649 வீடுகளை பூர்த்தி செய்வதற்கும் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.