• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட படையணியின் கோணஹேன முகாமில் மூன்றுமாடி படைவீரர் குடியிருப்பு மனையொன்றை நிருமாணித்தல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த நகர பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு கடமை களுக்காக இலங்கை பொலிசின் விசேட படையணியைச் சேர்ந்த பெருமளவான உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஆயினும் இந்த உத்தியோகத் தர்களுக்கு போதுமான வீட்டு வசதிகள் இல்லாமை காரணமாக கோணஹேன முகாமில் சேதமடைந்த நிலையிலுள்ள படைவீரர் குடியிருப்பு மனையொன்றை அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய மூன்றுமாடி படைவீரர் குடியிருப்பு மனையொன்றை நிருமாணிக்கும் பொருட்டு மேலும் நிதி ஏற்பாடுகளைக் கோரி பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.