• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேரூந்துகளை ஈடுபடுத்துதல்
- மேல் மாகாணத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பிரதான நடவடிக்கையொன்றாக தற்போது தத்தமது போக்குவரத்து வசதிகளுக்காக தனிப்பட்ட மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளை பொது போக்குவரத்து சேவையின்பால் கவர்ந்திழுப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் பயண முடிவிடத்திற்கு செல்வதற்கு இயலுமாகும் வகையில் பேரூந்துகளுக்கான முன்னுரிமை பாதை வரிசைகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையை மேலும் விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் பொது போக்குவரத்து சேவைக்காக தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் பேரூந்துகளுக்குப் பதிலாக குளிரூட்டப்பட்ட தாழ்ந்த தள சொகுசு மற்றும் பாதுகாப்பான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு பேரூந்து உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு 'என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை கடன் வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.