• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக்கொள்வதிலிருந்து விலக்களிப்ப தற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் மொரக்கோ இராச்சியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாக்களின் போது இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக்கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் மொரக்கோ இராச்சியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.