2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாகாண வீதி பராமரிப்பும் விருத்தியும் - வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி முகாமைத்துவ ஆற்றலை விருத்தி செய்வதற்கும் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை விருத்தி செய்வதற்குமாக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 125 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் நாடு முழுவதிலும் பரந்துள்ள மாகாண வீதிகளில் துரிதமாக செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் விருத்தி வேலைகள் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியங்களிலிருந்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான கருத்திட்ட முகாமைத்துவ சேவைகளை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |