2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர்களுக்கான பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும் - சிறுவர்கள் சார்பில் உயர் தரம் வாய்ந்த பகற் பராமரிப்பு வசதிகளை செய்யும் நோக்கில் தனியார் துறையுடன் இணைந்து பிராந்திய மட்டத்தில் 2,000 பகற் பராமரிப்பு நிலையங்களைத் தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பொருட்டு தேவையான மனித வளங்கள் மற்றும் முதலீடுகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமாக முதலீட்டாளர்களுக்கு தேவை யான நிதி உதவி வழங்கும் 'என்டர்பிரைசஸ் ஶ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை கடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கும் தேவைப்படும் ஏனைய ஒத்தாசைகளை வழங்கும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |