2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் களுக்கு நிவாரணங்களை வழங்குதல் - உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 06 மாதங்கள் என்னும் உச்சத்துக்கு உட்பட்டு மாதாந்த வீட்டு வாடகையினை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு குடியிருப்பதற்கு மாற்று காணிகளை வழங்கும் வரை இந்த குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் மாதாந்த வீட்டு வாடகையை தொடர்ந்தும் வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |