2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகள் சார்பில் மதியுரைச் சேவையினைப் பெற்றுக் கொள்ளல் - ஶ்ரீ ஜயவர்தனபுர பாரளுமன்ற கட்டடத் தொகுதியானது 1982 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்டதோடு, கடந்த 35 வருட காலப்பகுதிக்குள் இந்த கட்டடத் தொகுதிக்கு பிரதான திருத்த வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை. இதற்கமைவாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள திருத்த வேலைகளை செய்து கொள்வதற்கான மதியுரைச் சேவையை பாராளுமன்ற பதவியணி மதியுரைக் குழுவின் சிபாரிசினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |