2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மடுமாதா தேவாலய பிரதேசத்தை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்தல் - மடுமாதா தேவாலயம் கிறிஸ்தவ மதத்தினரின் வழிபாட்டுக்கும் அதே போன்று ஏனைய மதத்தவர்களின் மதிப்புக்கும் உட்பட்ட பழமைவாய்ந்த புண்ணிய பூமியாகும். இந்த மத வழிபாட்டு தளத்தை பாதுகாப்பதும் இங்கு வருகைதரும் மக்களின் தேவைகளுக்கான வசதிகளை வழங்குவதும் தற்போதைய தேவையொன்றாக கருதி மடுமாதா தேவாலயம் அமைந்துள்ள பூமியை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த பிரதேசம் சார்ந்த போக்குவரத்து உட்பட வீதி வசதிகள், நீர் வழங்கல் முறைமையையும் துப்பரவேற்பாட்டு வசதிகளையும் விருத்தி செய்தல், இந்த பிரதேசங்களுக்கு ஏனைய பிரதேசங்களிலிருந்து வருகைதரும் மக்களுக்கான தங்குமிடங்கள், ஓய்வுவிடுதிகள் போன்ற விசேட வசதிகளை வழங்குவது அடங்கலாக மடுமாதா தேவாலாய பூமி சார்ந்த விசேட அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |