2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மன்னார் மற்றும் காவேரி கடற்படுகையில் பெற்றோலிய அகழ்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு தகுதிவாய்ந்த சருவதேச எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கேள்வி கோருதல் - உள்நாட்டு மூல வளங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் எண்ணெய் மற்றும் வாயு என்பவற்றை வலுசக்திகளாக பயன்படுத்துவதன் மூலம் கணிசமான பொருளாதார நலன்களை அடையமுடியுமென கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோலிய வளம் உள்ளதென நம்பப்படும் மன்னார் மற்றும் காவேரி போன்ற பிரதேசங்களுக்கு எண்ணெய் கம்பனிகளினதும் புவியியல் நிபுணர்களினதும் அக்கறை காணக்கூடியதாவுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசங்களில் பெற்றோலிய வளம் உள்ளதென எதிர்பார்க்கப்படும் பிரதேசங்களில் பெற்றோலிய அகழ்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு சருவதேச எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கேள்வி கோரும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |