• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
25 பாலங்களை மீள நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் மேற்பார்வைக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் கீழான இரண்டு ஒப்பந்த பொதிகளின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை Dr.Nabeel Abdul Raheem Consultans (NARCO) நிறுவனம் Resources Development Consultans (Pvt) Ltd. நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள கூட்டு தொழில்முயற்சிக்கு 118,440 குவைத் தினார்களும் 169.2 மில்லியன் இலங்கை ரூபாவும் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.