• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குவதற்குத் தேவையான துணி
- இலங்கையில் மதக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் மதக்கல்வியினை போதிக்கும் ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குதலானது 2004 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு சார்பிலும் அறநெறி பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியைகளுக்கு சேலை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேவைப்படும் 64,000 சேலைகளை 103.04 மில்லியன் ரூபாவிற்கு புடவை கைத்தொழில் திணைக்களத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.