2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாஓயா அரலகங்வில வீதியின் உரிமையை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றுதல் - அம்பாறை மற்றும் பொலன்நறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கிடையே செல்லும் 23 கிலோ மீற்றர்கள் கொண்ட பயணிகள் போக்குவரத்துக்காகவும் பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்படும் மாஓயா அரலகங்வில வீதி, வனவள, வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான நிலபிரதேசத்தின் ஊடாக செல்கின்றதோடு, இது பின்னர் காப்பட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த வீதியின் பராமரிப்பு எந்தவொரு நிறுவனத்திற்கும் கையளிக்கப்படாதன் காரணமாக சேதமடைந்த நிலையில் உள்ளதனால் இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மாஓயா அரலகங்வில வீதியை முறையாக பராமரிக்கும் நோக்கத்தினைக் கொண்டு இந்த வீதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கும் பொருட்டு சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |