• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்
- இலாபகரம் மிக்க தொழிலொன்றாக கருதப்படும் தேனீ வளர்ப்பு தொழிலை மேம்படுத்துவதற்கு பாரிய வசதி இலங்கையில் உள்ளது. இருந்த போதிலும் தேனீ வளர்ப்பு தொழில் பற்றிய விஞ்ஞான ரீதியிலான அறிவு இல்லாததன் காரணமாக தற்போது இலங்கையில் தேனீ வளர்ப்பு தொழிலானது ஒழுங்கற்ற விதத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தேன் உற்பத்தி மிக குறைந்த மட்டத்தில் காணப்படுவதோடு, உள்ளூர் தேவையினை நிறைவு செய்வதற்கு தேன் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேனீ வளர்ப்பு தொழிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இரண்டு இலட்சம் தேனீ வளர்ப்பு அலகுகளை முதலாம் கட்டத்தின் கீழ் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீ்ழ் ஏற்கனவே 1,000 பேர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தேனீ வளர்ப்பு தொழிலை மேலும் விரிவுப்படுத்தும் பொருட்டு சுமார் இரண்டு இலட்சம் பேர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், வருமான வழிகளையும் உருவாக்கும் நோக்கில் நவீன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை தம்பேதென்ன கிராம உத்தியோத்தர் பிரிவில் தாபிக்கும் பொருட்டு சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கமத்தொழில் அமைச்சினதும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினதும் கூட்டு கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.