• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போகம்பர சிறைச்சாலையை பல்லேகலேயில் தாபிப்பதற்கான கருத்திட்டம்
- - போகம்பர சிறைச்சாலையை பல்லேகலேயில் தாபிக்கும் பணிகள் 2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதோடு, இதற்கான முழு திட்டத்திற்கான பணிகளிலிருந்து இதுவரை பூர்த்தி செய்யப்படாத அல்லது ஆரம்பிக்கப்படாத அத்தியாவசிய அபிவிருத்தி பணிகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைவாக போகம்பர சிறைச்சாலையை பல்லேகலேயில் தாபிக்கும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இதுவரை பூர்த்திசெய்யப்படாத கட்டடங்கள், உத்தியோகப்பூர்வ இல்லங்கள், வைத்தியசாலைகள், துப்பரவேற்பாடு மற்றும் பயன்பாட்டு வசதி முறைமைகள், உள்ளக பாதைகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை இந்த கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக செயற்படுத்தும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.